பேட்
சுதா (ப்ரதீக்ஷா லோண்கர்) மற்றும் அவரது கணவர் பாவு (அதுல் குல்கர்ணி) கசப்பான சம்பவங்களுக்குப் பின் விவாகரத்து பெறுகின்றனர். தனது இரண்டாவது கணவர் சதீஷுடன் (துஷார் டல்வி) அமைதியாக வாழ்கிறாள். தனது தாயாரைப் பற்றிய மங்கலான நினைவுகளுடைய ஆனந்தா அவரை என்றோ ஒரு நாள் காண விரும்புகிறான். தனது புகுந்தவீட்டாரின் தடை, சமூகத்தின் நியதி ஆகியவற்றைத் தாண்டி தன் ஒரே மகனை சந்திக்கும் ஆசையை சுதா நிறைவேற்றுவாளா?
